அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் பொங்கல் திருவிழாவில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையூர் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வருடந்தோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போன்று இந்த வருடமும் மிக சிறப்பாக தொடங்கியது.இந்த பொங்கல் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழா ஏற்பாடுகளை சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மகளிரணி கெளரவ தலைவர் திருமதி.சுசிலா செல்வராஜ் மிக சிறப்பாக செய்திருந்தார்.இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் சிவலிங்கம் , இன்ஜினியர் செல்வராஜ் , நாகராணி , பாக்கியலட்சுமி , மீனாள் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.