ஆர் .தீனதயாளன் செய்தியாளர்
பாபநாசம்
பாபநாசம் அருகே
புள்ளபூதங்குடியில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா
கபிஸ்தலம் அருகே சுவாமிமலை மெயின் ரோட்டில் அதிவேகமாக வந்த லாரி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஒன்றை வயது ராஜஸ்ரீ என்ற குழந்தை மீது மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது.
இது குறித்து கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீசார் லாரியை ஓட்டி வந்த தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.