ஆலங்குளம் துணை சமரச மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி;-

தமிழ்நாட்டில்சமரச மையம் ஆரமிக்கப்பட்டு
19- ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் துணை சமரச மையத்தின் சார்பில் சமரச மையத்தை பொதுமக்கள் பயனடைய வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் ஆனந்த வல்லி மற்றும் ஆலங்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி. முத்து செல்வம் ஆகியோர் தலைமை நடைப்பெற்றது.

ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பர்னபாஸ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் ஆலங்குளம் வக்கீல் சாந்தகுமார் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உதயசிங், இளங்கோ, சரவணன், விஜய். செல்வதினேஷ். மற்றும் நல்லூர் ஜெயராஜ் ,
அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஜூலியன்ஸ், டேவிட்சன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முடிவில் வழகறிஞர் திருமலை குமார் நன்றி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *