தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது.
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாண லட்சுமிபதி ஏற்பாடு செய்திருந்தார் அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பார்வையிட்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1400 பேர் தபால் வாக்களிக்க தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது அதன்படி இன்றும் நாளையும் காவல்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது