சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்துதிருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சித்ரா பெளா்ணமி திருவிழா வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 22ம் தேதி 527 பேருந்துகளும், 23ம் தேதி 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 22ம்தேதி 30 பேருந்துகளும்,

23ம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *