ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபம் பகுதியில் உள்ள 24 மீனவர்கள் மார்ச் மாதம் 20 தேதி அன்று மூன்று படங்களில் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர் அப்பொழுது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மூன்று படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் அனைவரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 24 மீனவர்களையும் கைது செய்தனர் மூன்று படகுகளுடன் 24 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது

மேலும் தகவல் அறிந்தவுடன் மத்திய அரசு மாநில அரசும் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தைக்கு பின்னர் 24 மீனவர்களையும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்தது இதனை அடுத்து அந்த 24 மீனவர்களையும் முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் என அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் 24 மீனவர்களையும் சென்னை விமான நிலையத்திற்கு இன்று அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை என அனைத்து சோதனைகளையும் முடித்த பின்பு 24 மீனவர்களையும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் பொழுது மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையிலான பாஜகவினர் அவர்களுக்கு சால்வை அணிவித்தும் உணவு பொட்டலங்கள் வழங்கியும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வாகனம் மூலம் 24 மீனவர்களையும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *