நவமால்காப்பேர் கிராமத்தில் 2.70 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணி.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 2.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை போர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியை ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வெங்கடேசன் துவக்கி வைத்தார் . உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சம்பத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கோகுல், சண்முகவேல், ராமு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.