புழலில் வடமாநில கட்டிட தொழிலாளியை ஏமாற்றி அவர் தந்தையிடம் இருந்து பணம் பறித்த வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் சமத் (வயது 39 )அவரது மகன் யாதுல் (வயது 18) இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு புழல் அம்பேத்கர் தெருவில் கட்டுமான வேலைக்காக வந்து அங்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கட்டிட பணி முடிந்து தனது மகன் யாதுளை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற யாதுல் அங்கு மற்றொரு வட மாநில கூலித் தொழிலாளியான மேற்கு வங்காளம் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த கைருல்ஹசன் (வயது 26)
என்பவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது யாதுலிடம் நீ ஊருக்கு செல்ல வேண்டாம் சென்னை திருவான்மியூர் பகுதியில் வேலை உள்ளது

அதில் உன்னை சேர்த்து விடுகிறேன் என்று கூறியதில் நம்பிக்கையில் அவருடன் சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சமயம் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி யாதுலின் தந்தையிடம் தனது மகன் விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும், மருத்துவசிலவுக்கு உடனே பணம் அனுப்புமாறு பொய்யான தகவல் கூறியதில் அதிர்ச்சியடைந்த தந்தை சமத் உடனே 46 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார்.

உடனே , விடுதியில் உள்ள யாதுளிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நைசாக நழுவி ஓட்டம் பிடித்தார். பின்னர் ஏமாற்றம் அடைந்த யாதுல் விடுதி உரிமையாளரிடம் இதுகுறித்து சொல்ல அவர்கள் புழலில் உள்ள தந்தையிடம் விபரம் கூறினர்.

அதன்பின் சமத் இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசிங் இது குறித்து வழக்குப்பதிவு செய்து செல்போனின் எண்ணை வைத்து திருவான்மியூர் பகுதியில் கட்டிட வேலை செய்யும் கைருல்ஹசன் என்பவரை கைது காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் பணத்தை இழந்தால் இதுபோல் செயல்பட்டதாக தெரியவந்தது.

பின்னர் புழல் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வடமாநில ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *