சுதந்திரப் போராட்டத்தில் கடுமையாக உழைத்து கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை சுதந்திரத்திற்காக போராடிய தியாகி விஸ்வநாத தாஸ் 138 பிறந்த தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவர் குலம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பழைய பாளையம் மருத்துவர் போல சாவடியில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு இரா. வெற்றிச் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பெ..சரவணன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் தலைவர் ஆறுமுகம், செயலாளர் கூ.மாரியப்பன், துணைச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுப்பிரமணியம் மற்றும் முத்துக்குமார் ஷங்கர் மாரிசாமி உள்பட பாலர் கலந்து கொண்டு பேசினார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மருத்துவர் குல மக்களுக்கு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், வீட்டுமனை பட்டா மற்றும் காலிமனை பட்டா வழங்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *