சமதர்மம் பரவட்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து !
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து
இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .
உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி மகிழ்வுடன் தமிழர் திரு நாளை கொண்டாடும் அனைவருக்கும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பாக இனிய நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
இந்த நாளில் உழவர் பெருமக்களையும் போற்றி இயற்கைக்கு நன்றி கூறுவதோடு நம் உழவு தொழிலுக்கு உறுதுனையாக இருக்கும் கால் நடைகளுக்கும் உற்றார் உறவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் இந்த தமிழர் திரு நாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை பறிமாறி கொள்வதோடு வறுமை நீங்கி சமதர்மம் தழைத்தோங்க இந்த தமிழர் திரு நாளில் உறுதி ஏற்ப்போம் இவ்வாறு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் கூறியுள்ளார். உடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சி.இ.ஓ அட்வகேட் மனோகர், சர்வதேச செயலாளர் அட்வகேட் முகமது சலீம் , தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் , புதுச்சேரி மாநில தலைவர் தந்தை பிரியன் ஆகியோர் உடன் இருந்தனர்