விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜி. சிங்கராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

துணைத் தலைவர் துணைக் கற்பகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. முத்து மாணிக்கம், எஸ். ஜெயராமன் மற்றும் கம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
தமிழ்ச்செல்வி உள்பட மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் நகர மன்ற அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் வருவாய் அலுவலர் முத்துச்செல்வம், நகராட்சி செயற்பொறியாளர் காதர் ஷெரீப், உள்பட அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *