பேருந்தின் படிக்கட்டுகளில் பயணிகளை தொங்கி செல்ல அனுமதிக்க கூடாது

அறிவுறுத்தலை மீறி பயணிகள் தொங்கி சென்றால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும், காவல் துறை நடவடிக்கை எடுக்கும் – கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் அரசு ,தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் பயணிக்க கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து வரும் நிலை உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி நிர்வாகித்தனர்,, பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்றது.

இதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் கோவில்பட்டி பகுதியில் இயக்கப்பட்ட வரும் தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்களில் சாதி ரீதியான, தனிநபர் தொடர்பான பாடல்களை ஒலிபரப்பு செய்ய கூடாது, டிரைவர்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, பேருந்தின் படிக்கட்டுகளில் பயணிகளை தொங்கி செல்ல அனுமதிக்க கூடாது,அறிவுறுத்தலை மீறி பயணிகள் தொங்கி சென்றால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும், காவல் துறை நடவடிக்கை எடுக்கும், பயணிகளிடம் கனிவாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *