திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் சிறை அங்காடியில் இன்று முதல் சலுகை விலையில் பொது மக்களுக்கு இனிப்பு,காரம் விற்பனை
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறை அங்காடி திறக்கப்பட்டது இங்கு இனிப்பு, காரம், எண்ணெய் வகைகள், போர்வைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் வாழும் கைதிகளால் தயாரிக்கப்பட்டது. வெளியில் விற்கப்படும் இனிப்பு,கார உணவுப்பொருட்களின் விலையை விட இங்கு சலுகை விலையில் விற்கப்படுகிறது. என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.