அலங்காநல்லூர் அருகே திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது
அலங்காநல்லூர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் திமுக வடக்கு மாவட்ட சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் தண்டலை தவசதீஷ், அரவிந்தன், சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மாணவ மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணைச் சேர்மன் சங்கீதாமணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ஒன்றிய பொருளாளர் சுந்தர், பேரூராட்சி தலைவி ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார்,
தேவிமகேந்திரன், பண்னைகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, துணை அமைப்பாளர் ஆனந்த், மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், ஒன்றிய பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ராஜாஜி ரியாஸ்கான், சங்கர், ஜெயராமன், ராஜ்குமார், வெங்கட்,ஆனந்த்நரேஷ், வெங்கடேஷ், தேன்மொழி, பிரேமலதா, மற்றும் டாக்டர் கோகுல் கோவிந்தராஜ், சின்னஊர்சேரி கிளைக் கழக நிர்வாகிகள் தியாகு, முடுவார்பட்டி சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..