வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழ செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் 2024-25- ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பழ தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதிச்ச மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் துர்கா தேவி வைரவேல் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிவசங்கர், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சா. திருச்செல்வன்,தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் வரதராஜன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகுப்பினை வழங்கி, துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பழ செடி தொகுப்பினை பெற்று சென்றனர். பழ செடி தொகுப்பு ஒன்றில் சப்போட்டா, கொய்யா, பப்பாளி, சீதா, எலுமிச்சை ஆகிய ஐந்து வகை பழ செடிகளை கொண்டது.

இதனை ஆதார் நகல் மற்றும் 75% மானியத்தில் ரூபாய் 50/- தொகை (முழுமதிப்பு ரூபாய் 200/-) செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் சா. திருச் செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *