இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடும்,அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு ரொட்டி, பழம், இனிப்புகள் வழங்கபட்டது.

நிகழ்ச்சியை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்
ஆர்.சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார்,மாவட்ட தலைவர் ஏ.ரெங்கசாமி முன்னிலை வகித்தார் மாநில பொதுகுழு உறுப்பினர்கள் பொன்சக்தி மோகன்,நகர் மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ் சிமிண்ட் நாகரத்தினம், பால்கனி, சிவசுப்ரமணி,
ரவி ராஜா, ராஜாராம், ஏபி. சக்தி, வெங்கட்ராமன், லட்சுமணன், கணேசன், பச்சையாகத்தான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *