தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்
கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிகளில் பெய்த கன மழையால் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநிர்கள் மற்றும் இளைஞர்களுடன் மணல் மூடையை சேதமடைந்த சாலையில் அடிக்கி தற்காலிகமாக சீர் செய்து போக்குவரத்து சீராக செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களின் செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு நேர உணவுகளை செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் உதவியோடு வழங்கியது தாயுள்ளத்தோடு செயல்பட்ட செயல் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *