பெஞ்சல் புயலால் வீடு இழந்த மக்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு பெஞ்சல் புயலால் ஏற்பட்ட தொடர் மழையால் மணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து தொடர் வெள்ளப்பெருக்கால் 8ம் தேதி ஆற்றங்கரையோரம் இருந்த 19 வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டது .

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 19 குடும்பத்தினரை வீடுகளை விட்டு வெளியேற்றிய அரசு அதிகாரிகள் அவர்களை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிவாரணம் முகாம் அமைத்து தங்க வைத்தனர். இந்நிலையில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இன்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுக்கு காலை உணவு, உடைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதனையடுத்து சித்தேரிகுப்பத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இலவச வீட்டு மனைக்கான பட்டாவை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், வட்டாட்சியர் உதயகுமார், விருத்தாசலம் நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், நகராட்சி ஆணையர் பானுமதி திமுக நகர செயலாளர் தண்டபாணி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோ உடன் இருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *