தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 95 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்

முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான சிங்காரவேலர் விருது பெற்ற தேனி தமிழ் சங்கத்தின் செயலாளர் சுப்ரமணி அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 4700 மதிப்பிலான செயற்கை கால்கள் இரண்டு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது துணை ஆட்சியர் பயிற்சி மனு அரவிந்த் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாச்சலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாச்சலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *