திருவொற்றியூரில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கலில் கே. பி. சங்கர் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

திருவொற்றியூர்

திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் பகுதியில் திமுக மாநில மீணவரணி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. திமுக மாநில மீணவரணி துணை தலைவரும், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமத்துவத்தை போற்றும் வகையில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என அனைத்து மதத்தவரும் ஒன்றிணைந்து கே.வி.கே.குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சூரியனை வணங்கி பெண்கள் கும்மியடித்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

மேலும் சுமார் 500 க்கும மேற்பட்ட மாற்றுதிறனாளிகள், மீனவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அரிசி, வெல்லம், கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு அடங்கிய நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மீணவரனி மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம். கோமதி. சந்தோஷ் பாலுமதி. சந்திரன் கீர்த்தி. மற்றும் கழக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *