பெரம்பலூர் அதிமுகவின் பொது செயலாளரும் எதிர்க்கட்சியின் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கழக பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.

அதன்படி மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், கட்சியின் நீண்டகால உறுப்பினருமான சிறுகுடல் செல்வராஜை அறிவித்திருக்கிறார். அதை ஒட்டி பரிந்துரை செய்த மாவட்ட கழக செயலாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் பல்வேறு பொறுப்புகளில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து சால்வை அணிவித்தனர்.உடன் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *