முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சென்னை,தலைமை செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடனும், மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணியில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை தளம் மற்றும் பன்னிரண்டு தளங்களுடனும் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *