புதுச்சேரியில் சுகாதாரத்துறை டிஎம்எஸ் அலுவலகத்தில் வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பாக 17 ம் நாள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .ஏன் என்று சொன்னால் முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தபடி அனைத்து வாரிசுதாரர் நபர்களுக்கும் ஒருமுறை தலைவர் அளித்து பணி வழங்கப்படும் என்ற ஆணையை நிறைவேற்ற கோரி அனைத்து வாரிசுதாரர்களும் தன் குடும்பத்துடன் வாயில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நிர்வாகம் நீங்கள் செய்வதை செய்யுங்கள் ஆனால் நாங்கள் ஐந்து சதவீதம் மட்டுமே பணியில் ஆட்களை அமர்த்துவோம் என்றுகுறிக்கோளுடன் வேலை செய்து வருகிறார்கள்.வருடம் ஒருமுறை ஐந்து சதவீதம் என்ற அடிப்படையில் ஆட்களை நிரப்ப வேண்டும் ஆனால் சுகாதாரத்துறை நிர்வாகம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5% என்ற என்ற அடிப்படையில் ஆட்களை நிரப்புவோம் என்று அடம் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

எங்கள் குடும்பங்களின் வாழ்க்கைக்கு என்னதான் பதில் என்று எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இன்று தெருவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்க்கை ? நிலைமை என்ன ?யார் எங்கள் வேலைக்கு பொறுப்பு ? நிர்வாகமா ?அல்ல ?? யார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *