தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் பணி வல்லுநர்கள் சங்கம் துவக்க விழா மற்றும் தொழில்துறை ஆற்றல் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கம் கல்லூரியின் முதுகலை வணிக மேலாண்மைத் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி மற்றும் தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தார்.
கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்கல்லூரி முதல்வர் தமிழரசு வாழ்த்துரை வழங்கினார்
முதுகலை வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் ஆ.உஷா லட்சுமி வரவேற்று பேசினார்.க்ரஸ்டல் இஞ்சினியரிங் சிஸ்டம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரனவ் ஏ இராஜேந்திரன் அமைப்பை தொடங்கி வைத்து தொழில் துறை ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் குறித்த கருத்துரை வழங்கினார்.நிறைவாக உதவிப் பேராசிரியர் நந்தினி நன்றி கூறினார்.நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.