தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக முதல்வர் அறிவித்த மகளிர் உதவித்தொகை ரூபாய் 5000 வழங்கப்பட்டதற்கு பெண்கள் நன்றி தெரிவித்து இன்று தாராபுரம் தொகுதி எம்எல்ஏவும் தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மகளிர் உடன் கொண்டாடி அங்கு செல்லும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர கழக செயலாளர் முருகானந்தம் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர் இது ஒரு பேசிய அமைச்சர் மகளிர்க்கு இந்த 5000 ரூபாய் மூன்று மாதங்களில் கிடைக்க வேண்டியது முன்பே கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அனைத்து பெண்களும் தமிழக அரசையும் முதல்வரையும் நன்றி பாராட்டி வருகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.