திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா கீழ் மலை பாச்சலூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மூலமாக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர்.
அண்ணாதுரை அவரது பரிந்துரையில் சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசர காலங்களில் மருத்துவ பயன் பாட்டிற்காகவும், சிராமமான பாச்சலூர் கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதிய வாகனங்கத்திற்க்கு கிராம மக்கள் மாலை மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.இதில் பழங்குடியின பெண்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கீழ் மலைபளியர் பழங்குடியின மக்கள் சார்பாகவும், ஆரோக்கிய அகம் சார்பாகவும் கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.