தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி சார்பில்
ஒருநாள் தொழில்நுட்பக் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே அமைந்துள்ள ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒருநாள் தொழில் நுட்பம் குறித்தான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்திற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி, தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தனர்.
கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த், கல்லூரி முதல்வர் தமிழரசு, மற்றும் கல்லூரி துறைத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ஹெக்சஷாவேர் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் “மாணவர்கள் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு பெருமைப்பட வேண்டும் . மாணவர்கள் தங்கனது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி தங்கள் துறை சார்ந்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
சிறந்த தொழில் முனைவோராக ருவாகுவதற்கு அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது அவசியம் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கின் நிறைவாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறைத் தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்
நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.