நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 04.04.2025 முதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பக்தர்களின் பால் குடம் ஏந்தி பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.பல பக்தர்கள் வாயில் வேல் களை குத்தி ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.கோவில் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலமானது மேல் கூடலூர் பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.