கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா …..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தமிழக வெற்றிக்கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா கிளை கழக செயலாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் இணைச் செயலாளர் மணிகாண்டன், பொருளாளர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு. நீர்மோர் தர்பூசணி இளநீர் ஆகியவற்றை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.