பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ நரசிம்மர் ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா …
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடம் எடுத்து நேர்த்திக் கடன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுத்தெருவில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ நரசிம்மர் சித்திரை மாத பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சின்னாற்றங்கரையிலிருந்து பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ நரசிம்மருக்கு மஞ்சள் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை பாபநாசம் புதுத்தெரு கிராமவாசிகள் நாட்டாமைகள் செய்திருந்தனர்.