C K RAJAN Cuddalore District Reporter..
9488471235…

கடலூரில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார், தலைமையில் அனைத்து அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழியினை எற்றுக்கொண்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,

உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு. நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய் துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்” என ஏற்றுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் அற்ற தமிழகம் என்ற இலக்கினை அடையும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்களால் கடந்த 4 ஆண்டுகளில் 4661 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 31 குழந்தை / வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை/வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 கடையின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றத்தால் ரூ.45,000/- அபராதமும், 27 நிறுவன உரிமையாளர்களுக்கு இணக்கக்கட்டண அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. ரூ. 2.75.000/-

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பொதுமக்கள் / வேலையளிப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜீன் 2025 மாதம் முழுவதும் மாவட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழில்களிலும்,18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் வேலையளிப்பவருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிபுரிவது தெரியவந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்.. தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், பயிற்சி ஆட்சியர் மாலதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *