காங்கயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும் பணி கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இம்மாதமும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் பணம் ரூ. 26,04,117 ரொக்கமும், தங்க நகை 29 கிராமும், வெள்ளி 490
கிராமும் மற்றும் மலேசியா நாட்டு பணங்களும் இந்த உண்டியலில்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
அறநிலையத்துறை சேர்ந்த கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோயில் உதவி ஆணையர் இளையராஜா, காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள் மற்றும் காங்கயம் சரக ஆய்வர் அபிநயா ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. மேலும் கோவில் உண்டியல் காணிக்கை கோவில் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.