ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தில் திமுக பேரூர் இளைஞரணி சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி,
வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் ஜாகிர்உசேன்,கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா,துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் பூபாலன் திருநாவுக்கரசு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.கழக இளம் பேச்சாளர் முகம்மது அஸ்மத் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள்குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பாத்திமாகனி,துணைத் தலைவர் மாரி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள்
உட்பட பொதுமக்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *