சென்னை தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியம்மா(54). இவர் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது அவருடைய தங்கை கோவிந்தம்மாள் முனியம்மாளை பார்க்க வந்து இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று வீட்டின் மேல் சீலிங் இடிந்து சகோதரிகள் மீது விழுந்தது. இதில் முனியம்மாளுக்கு இடது காலிலும், கோவிந்தம்மாளுக்கு வலது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர் இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *