சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.

திங்கட்கிழமை காலை தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் பிரச்சார லோகோவை நேற்று வெளியிடுகிறார்.

திமுகவிற்கு எதிரான இந்த பிரச்சார பயணம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி கே பழனிச்சாமி திருவொற்றியூரில் சாமி தரிசனம் செய்தார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு எடப்பாடி கே பழனிச்சாமி வருவது இதுவே முதன்முறையாகும்.

கோவில் உதவி ஆணையர் நற்சோனை அவரை வரவேற்றார் கொடிமரத்தை சுற்றி கும்பிட்டார் அதன்பின் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆதிபுரீஸ்வரர் வட்டப்பாறை அம்மன் இறுதியில் வடிவுடையமனை சாமி தரிசனம் செய்தார் கோவில் வளாகத்தில் அங்கிருந்த பொது மக்களுக்கு பிரசாதங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் கட்சி கொடிகள் கட்டப்படாமல் அமைதியாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அரை மணி நேரத்தில் அவர் சென்று விட்டார். அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *