கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளை கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை,மற்றும் செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகரான சூர்யா, பிறந்த நாளை முன்னட்டு, கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாகிகள் பகவதி,,விஜய்,கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
முன்னதாக , கோணியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர்,கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து, குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி, மருத்துவ சிகிச்சை வரும் ஒருவருக்கு உதவி தொகை வழங்கினர்..
இதே போல வடவள்ளி பாரத அன்னை இல்லத்தில் மதிய உணவு,கண் பார்வையற்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர் பின்னர் பொள்ளாச்சி நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள், கிரி, கணேச மூர்த்தி,ஜெகன், பூபதி, பிரபு மற்றும் மேற்கு நகர நிர்வாகிகள் சஞ்சய், அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்…