திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும், கட்சியின் அமைப்பு செயலாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர். காமராஜ் அவர்களுக்கும் கட்சியினர்,

பொதுமக்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர்.ஜி. பாலா, தொழவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்னகுமார், பொருளாளர் எஸ். அருள்முருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விடையல் சங்கர், அண்ணா தொழிற்சங்க சிவசங்கர வேலன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதற்கு முன்பாக ஆலங்குடி கடைவீதியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *