திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விளந்தை to கழுமரம் செல்லும் இணைக்கும் பாலம் முழுவதும் சேதமடைந்தது.

இந்த பாலத்தில் சுற்றியுள்ள கிராம மக்கள் தினமும் 100க்கும் மேற்பட்டோர் கடந்து செல்வார்கள். இந்த பாலம் முழுவதும் சேதமடைந்ததால் 4 கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கிம நிலையில் தற்போது நடைபெறாமல் இருக்கிறது .

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *