எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினி கோட்டத்தில் 53 ம் ஆண்டு கற்புக்கரசி கண்ணகியின் வீடு பேறு அடைந்த நாள் விழா. 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.
.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனுடம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

53 ஆம் ஆண்டு கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடும் சிலம்புபொழிவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பத்தினி கோட்டத்தில் உள்ள கண்ணகியின் பெருமைகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். கண்ணகி பெருமாட்டிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விழாவில் 76 ஊர்களை சேர்ந்த ஏராளமான நகரத்தார்கள்,பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணகியின் சிறப்புகளை 108 போற்றிகள் கூறி வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *