அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக நடந்தது விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார் செயலாளர் பிரபுசங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார் அரசு மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கொளஞ்சிநாதன் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார் டாக்டர்கள் செந்தில்குமார் சிவக்குமார் அறிவுச்செல்வன் அன்புசெல்வம் டாக்டர்கள் ரவிராம்குமார் மணிமாறன் யாசின் கௌதம் அறிவு செல்வம் சிவக்குமார் ரோட்டரி சங்கம் பாலமுருகன் எஸ்ஆர்டிஜிட்டல்ராஜா கார்த்திகேயன் மகேந்திரன் கொளஞ்சி வெங்கடேசன் செவிலியர்கள் சார்பில் ஆனந்தி கிருஷ்ணலீலா அபிராமி மஞ்சுளா வனஜா உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டது

மேலும் தாய்மார்கள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முறைகள் பற்றி அனைத்து மருத்துவர்களும் தாய்மார்களுக்கு விளக்கி கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *