திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணா நகர் உழவர சந்தை, திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் மற்றும் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா உழவர் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் சொர்ண பாரதி வழிகாட்டலில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா உழவர் சந்தை வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மூவர்ணத் தேசியக் கொடியினை ஏற்றினார்.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலர் பத்ரிநாராயணன், உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கார்த்திகா, லோகராணி, திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக் பாட்ஷா, 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது, ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் , திருச்சிராப்பள்ளி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் செயலர் சரவணன், சக்தி சங்கர் தலைவி சுபத்ரா தியாகராஜன், ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் குமரன், பத்மகிருஷ்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்,திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி மிட் டவுன், வாசவி கிளப் வனிதா ராக்போர்ட் திருச்சி, திருச்சிராப்பள்ளி ஆயிரம் வைசிய மஞ்சப்புத்தூர் மகா ஜனசபை, திருச்சிராப்பள்ளி ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர், திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், ஸ்ரீ ராதாகிருஷ்ண மகளிர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.