திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தனியார் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்.விக்ரமராஜா தலைமையில், கொடைக்கானல் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஐ பி.செந்தில் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் நகர் மன்ற தலைவர்.செல்லத்துரை, துணை தலைவர்.மாயகண்ணன் மற்றும் வணிக சங்கமக்கிய பிரமுகர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பழனி நகராட்சி சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *