துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளராக வடமலை கடந்த 2022 ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தார்.எஸ்ஐ வடமலை மற்றும் காவலர் விக்னேஷ் உடன் 21/02/2022 அன்று திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிக்கம்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் நந்தகுமார் (32)என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த கிழக்கு தெப்பக்குளம் தெருவை சேர்ந்த வேல்முருகன்(39) என்பவர் கீழே இறங்கி எப்படி என் வண்டியை நிறுத்தலாம், உங்களுக்கு இதே வேலையா போச்சு,என்று எஸ்ஐ வடமலையை ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.

தடுக்க வந்த காவலர் விக்னேஷ்யும் ஆபாச வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.எஸ்ஐ வடமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (14/08/2025) விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த துறையூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நர்மதா ராணி, குற்றவாளி வேல்முருகனுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 332- ன் கீழ் ஒரு வருட சிறை தண்டனையும் ,ரூ2000 அபராதமும்,தவறினால் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ,அதே போல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353-ன் கீழ் 6 ஆறு மாத சிறை தண்டனையும்,ரூ1000 அபராதமும், தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்ததார்.

அதாவது ஒன்றை வருட ஜெயிலு, மூன்று ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பெரிய மரத்தி ஆஜராகி வாதாடினார்.

வெ.நாகராஜு
திருச்சி மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *