இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் உள்ள பேரையூர் கொல்லங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்,அவரது மனைவி திருமதி சந்தியா வயது 29 கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார்

அதனை தொடர்ந்து மூளை சாவு அடைந்த சந்தியாவின் கணவர் செல்வக்குமார் மற்றும் சந்தியாவின் உறவினர்கள் சந்தியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து, தானாக முன்வந்து கண், இருதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் ராமநாதபுரம் மருத்துவகல்லூரியில் தானம் செய்யப்பட்டது.. தானமாக பெற்ற உடலுறுப்புகளை ஆம்பூலன்ஸ் மூலம் மதுரை விமானநிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னையில் பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர் உடல்உறுப்புகளை தாமாக முன்வந்து தானம் செய்து பலருக்கு வாழ்வுதந்த சந்தியாவின்உடலுக்கு காவல்துறையினரும் மருத்துவகல்லூரி மருத்துவமனை டீனும் மரியாதை செலுத்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *