எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தில் தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி.மாநிலம் முழுவதும் இருந்து 26 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழமூவர் கரை மீனவர் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. பகல் இரவாக நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 26 பெண்கள் கபடி அணியினர் பங்கேற்று விளையாடினர்.
மயிலாடுதுறை மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இறுதி ஆட்டத்தில் அந்தியூர் பெண்கள் கபடி அணியினர் 44 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். ஒட்டாஞ்சத்திரம் பெண்கள் கபடி அணியினர் 21 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், திருவண்ணாமலை பெண்கள் கபடி அணியினர் மூன்றாம் இடமும், அரியலூர் பெண்கள் கபடி அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் கேடயங்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கீழமூவர் கரை மீனவ பஞ்சாயத்தார் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.