இஞ்சிக்கடவு, மாறாமலை, தடிக்காரன் கோணம், பள்ளக்குளம், சுருளோடு, குலசேகரம், காளிகேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மிளகு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நல்ல மிளகு காய்க்கத் தொடங்கியுள்ளது.
இவை பழுத்து வருகிற ஜனவரி மாதம் அறுவடைக்கு தயாராகும் நிலைக்கு வரும். நல்ல மிளகு காய்க்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.