இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் வலையபூக்குளம், காக்குடி,
மரக்குளம், மண்டலமாணிக்கம்,
எழுவனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், முன்னிலை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக்சண்முகம், கோபிநாத், யூனுஸ்,பாண்டியம்மாள், இன்பராஜ், ரவிக்குமார், செந்தூர்பாண்டியன்,சுந்தரபாண்டியன், பூமாரி, ஜெயகிருஷ்ணன், மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை,பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் மனுக்கள் 501 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.