திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அந்த ஆலயத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வருகை தந்து அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அவரை ஆலயத்தின் குடமுழுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி. ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர், முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் ஆகியோர் வரவேற்று அவருக்கு ஆலய மரியாதை செய்தனர். முன்னாள் அமைச்சருடன் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் குமாரமங்கலம் கே. சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *