தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் ஜி டி என் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை கணினி அறிவியல் கணினி இலக்கியம் மற்றும் சைபர் கிளப் சார்பில் தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் இணையதள சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம்,கல்வி இயக்குனர் மார்கண்டேயன் வழிகாட்டுதலில் முதல்வர் சரவணன் தலைமையில் துணை முதல்வர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், உதவி ஆய்வாளர்கள் ஈஸ்வரி, கோமதி ,லாயிட்சிங், முதுகலை கணினி அறிவியல் துறை தலைவர் பூபதி,அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பாளர் ராஜன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் சிவசங்கர் சேகரன் பேசுகையில்,TRAI என்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைக் குறிக்கிறது , இது இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை ஒழுங்குமுறை அமைப்பாகும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அமைக்கப்பட்டது. இது கட்டணங்கள் மற்றும் சேவையின் தரத்திற்கான விதிகளை அமைக்கிறது, வாடிக்கையாளர் புகார்களை நிர்வகிக்கிறது மற்றும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி போன்ற சிக்கல்களை தவிற்கிறது.


இந்தியாவின் டிஜிட்டல் தொடர்பு உள்கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மை, போட்டி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதற்காக தொலைத்தொடர்பு கொள்கையை வடிவமைப்பதில் டிராய் முக்கிய பங்கு வகிக்கிறது. TRAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்விதிமுறைகள் பற்றிய தகவல்களைக் கண்டறியலாம்.,
தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புகாரளிக்க TRAI DND (தொந்தரவு செய்ய வேண்டாம்) செயலியைப் பயன்படுத்தவும், இது ஸ்பேம் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தொலைத்தொடர்பு சேவைகள் தொடர்பான புகார்களை நுகர்வோர் பதிவு செய்வதற்கான தகவல்களையும் நடைமுறைகளையும் TRAI வலைத்தளம் வழங்குகிறது. டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்குக் கல்வி கற்பிக்க வடிவமைக்கப்பட்ட புதிய கொள்கைகள் மற்றும் சமூகத் திட்டங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு TRAI இன் அதிகாரப்பூர்வ தளங்களை பின் தொடருங்கள் என்றார். முன்னதாக ஹர்ஷினி வரவேற்க நிறைவாக மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *