திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் விடையல் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர்.ஜி.பாலா, தொழவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்னகுமார், பொருளாளர் எஸ்.அருள்முருகன், நகர இணைச் செயலாளர் பட்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆலங்குடி துரைராஜ், மாத்தூர் குமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விடையல் சங்கர், அண்ணா தொழிற்சங்க சிவசங்கர வேலன்,மோகன், ராஜா, எஸ் .பி.செந்தில், தமிழ் செல்வன் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.